முகப்பு
தமிழ்நாடு

நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

நான் முதல்வன் திட்டம் என்றால் மக்களுக்கு புரியவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 21 ஜூன் 2026, 2:59 pm IST
அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் - கோப்புப்படம்.
பகிர்:

நான் முதல்வன் திட்டம் என்றால் மக்களுக்கு புரியவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தவெகவின் நிலைப்பாடு. ஒரு தேர்வைக் கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் தேர்வை நடத்துவதில் முதிர்ச்சியில்லை.

நீட் வினாத்தாளை கூட ஒழுங்காக சேர்க்க முடியவில்லை. தென் மாநிலங்களில் சிறப்பாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள்தான் தவறு நடக்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இந்த தவறு நடக்கிறது.

Advertisement

Advertisement

கடந்த வாரம் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. இனியாவது தவறை உணர்ந்து நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்ட சில நபர்கள் குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள்.

திமுக - அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம். நான் முதல்வன் திட்டம் என்றால் மக்களுக்கு புரியவில்லை. மக்களுக்கு புரியாது என்பதால் திறன் மேம்பாடு திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் திட்டம் தொடர்கிறது.

தவெக ஆட்சியில் முதல் விஜய் மட்டும்தான் பவர் சென்டர். போன அரசு செய்த தவறுகளால் தொழில் முதலீடுகள் வெளியே சென்று விட்டது. இவ்வாறு குறிப்பிட்டார்.

summary

Minister Nirmalkumar has stated that people did not understand what the 'Naan Mudhalvan' scheme meant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.