முகப்பு
தமிழ்நாடு

மின்துறை முறைகேடுகள்; ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது எப்படி? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது எப்படி? என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளதைப் பற்றி...

Updated On : 4 ஜூன் 2026, 11:03 am IST
அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்.
பகிர்:

மின்வாரிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது எப்படி? என மின்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில், மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பல ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கடந்த மாதம் புகார்கள் கிடைத்திருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையில் இருக்கும் போது எதுவும் பேசமுடியாது. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்குகள் குறித்து ஆய்வு செய்ய கூறியிருக்கிறோம். கணினிகளில் இருக்கும் தரவுகளை பேக்-அப் எடுத்து வைக்க உத்தரவிட்டிருக்கிறோம்.

Advertisement

Advertisement

யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாயமான கோப்புகள், ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

அதைத்தொடர்ந்து அதிகளவிலான மின்தடையைத் திசைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு, “மின்தடைக்கும் இந்த ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல்போன சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

காற்றாலைகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மின்தடைகள் ஏற்பட்டு வருகின்றன. எந்தவித நோக்கமில்லாமல் யாரும் ஹார்ட் டிஸ்க்குகளைத் திருடியிருக்க மாட்டார்கள். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆட்சியில் இருந்த டெண்டர் தொடர்பான விவரங்கள் மாயமாகியுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.