கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது பற்றி...
கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 24) கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள கவிஞர் கண்ணதாசனின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து, சிலை முன்வைக்கப்பட்டுள்ள புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என். ஆனந்த், வெங்கடரமணன், மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tamil Nadu Government pays tribute to Poet Kannadasan's statue!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.