முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ சேர்ப்பு!

அரசுப் பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ பெயர் சேர்க்கப்பட்டது பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 11:01 am IST
அரசுப் பேருந்துகளில் மீண்டும் ‘தமிழ்நாடு’ சேர்ப்பு - x
பகிர்:

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யால் இன்று தொடக்கிவைக்கப்பட்ட புதிய அரசுப் பேருந்துகளில் ’தமிழ்நாடு’ என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் பேருந்துகளில் ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், தமிழ்நாடு என்ற பெயரைச் சேர்த்து ’தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என பேருந்துகளின் கண்ணாடியில் அச்சிடுமாறு, கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், இன்று முதல்முறையாக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை தொடக்கிவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

முதல்வர் விஜய்யால் தொடக்கிவைக்கப்பட்ட இந்த பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய அரசுப் பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் 29 ஏ என்ற மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

summary

'Tamil Nadu' to be added back to government buses!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments