தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வரும் தயாளு அம்மாள் (வயது 93), வயது முதிா்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தயாளு அம்மாளின் மகனான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று காலை சென்று நலம்விசாரித்தார்.
மேலும், தயாளு அம்மாளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.
Dayalu Ammal, wife of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi, has been admitted to the hospital
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.