மூன்றாவது மொழிக்கான கட்டாயம் இல்லை: கனிமொழி சோமு
கல்விச் சிந்தனை அரங்கில் கனிமொழி சோமு பேசியது குறித்து...
தமிழ்நாட்டில் மூன்றாவது மொழிக்கான கட்டாயம் ஏற்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திமுக எம்.பி., கனிமொழி சோமு கலந்துகொண்டனர். இந்த விவாத நிகழ்வை தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.
இதில், இளைஞர்களை மேம்படுத்துதல் : இந்தியாவின் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் கனிமொழி சோமு பேசியதாவது:
Advertisement
Advertisement
''திமுகவின் முதுகெலும்பாக இளைஞர் அணி உள்ளது. அறிஞர் அண்ணாவில் இருந்து தற்போது உள்ள தலைவர்கள் பலரும் அதில் இருந்து வந்தவர்கள்தான்.
தாய் மொழியில் பேசுகிறோம். மற்றவர்களுக்கு கருத்துகளைப் பரிமாற ஆங்கிலம் பேசுகிறோம். அது தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கருத்துகளைப் பரிமாற உதவுகிறது. ஹிந்தி அறிந்துகொள்வதற்கான தேவை என்ன? மூன்றாவது மொழிக்கான கட்டாயம் ஏற்படவில்லை.
கல்விக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆன்லைனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களே பயனர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர விரும்புகின்றனர். அரசு அதிகாரிகளாக இருந்து சேவையாற்றவும் விரும்புகின்றனர். ஆனால், சமூக வலைதளப் பயன்பாடு சில இளைஞர்களை சீரழிக்கிறது. சிலர் நேர்மறையாக பயன்படுத்தினாலும், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தவறான வழிகளில் செல்வதை மறுக்க முடியாது.
அரசியல் எளிதானது அல்ல. இன்று போட்டியிட்டு நாளை வெற்றி பெற முடியாது. அதற்கு துடிப்பான நோக்கமும் அயராத உழைப்பும் இளைஞர்களுக்கு அவசியமானது '' என கனிமொழி சோமு பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.