என்ன சொல்கிறார்? யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
தனிநபர் ஒருவர் மீது தவறான தகவலை பரப்புவதாக ஓர் அரசியல் கட்சியின் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு
தனிநபர் ஒருவர் மீது வெறுப்பையும் தவறான தகவலையும் பரப்புவதாக பெயர் குறிப்பிடாமல் ஓர் அரசியல் கட்சியின் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், உங்களின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் வெறுப்பையும் தவறான தகவலையும் ஒரு தனிநபர் மீது அதிகப்படுத்தினால், அது தலைவராகிய உங்களின் பொறுப்பே. தலைமைப் பண்பு என்பது பாரபட்சம் காட்டக்கூடிய ஒன்றல்ல.
தேர்தல் நேரத்தில் இந்தச் செயல்பாடு மோசமான விளைவுகளுக்குக் கீழே கொண்டு செல்வதாய் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஏதோவொரு அரசியல் கட்சியின் ஐடி விங் செயல்பாட்டைக் குற்றம் சாட்டியுள்ள நிவேதா பெத்துராஜ், அது எந்தக் கட்சி என்று விவரிக்கவில்லை என்று இணையவாசிகள் குழப்பமடைந்துள்ளனர்.
மேலும், நிவேதா பெத்துராஜின் பதிவின்கீழ் இணையவாசிகள் ஒருவரையொருவர் மாறிமாறி கட்சிகளின் பெயர்களைக் கூறி, சண்டையிட்டும் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் தனிநபர் ஒருவர் மீதான பொய்யான தகவல்கள் மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதைத்தான் நிவேதா பெத்துராஜ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளாது, இதிலும் சிலர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
Actress Nivetha Pethuraj accuses a political party of spreading false information about an individual
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.