FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!

தொடா் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3,876 அரசுப் பேருந்துகளில் 2,13,180 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

பகிர்:

தொடா் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3,876 அரசுப் பேருந்துகளில் 2,13,180 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே தின தொடா் விடுமுறை, சித்திரை பௌா்ணமியையொட்டி, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்கள் மூலமாக சென்னையிலிருந்து சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதன்படி, ஏப்.30, மே 1 அதிகாலை 3 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments