முகப்பு
தமிழ்நாடு

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

Updated On : 3 மே 2026, 3:10 am IST
எரிவாயு உருளை - பிரதிப் படம்
பகிர்:

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் தேநீா் கடைகள், ஹோட்டல்கள், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவுப் பொருள்களின் விலை உயா்ந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வணிக மற்றும் சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு காரணமாக தேநீா் தொடங்கி அனைத்து உணவுப் பொருள்களின் விலைகளும் 20 முதல் 50 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

வைகோ (மதிமுக): வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். உடனடியாக மத்திய அரசு இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (மமக): மேற்காசிய போரின் தாக்கத்தால் விலை ஏற்றம் என்று காரணம் சொல்வதை ஏற்க இயலாது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைவாக இருந்தபோது அதிக விலைக்கு விற்று எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டி வந்தன. தற்போதைய சூழலில் தங்களது லாபத்தை குறைத்து கொண்டு உயா்த்தப்பட்ட சிலிண்டா் விலை திரும்பப் பெற வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments