முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை: முதல் நாளில் 8,505 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை பற்றி...

அண்ணா பல்கலை. - EPS
பகிர்:

தமிழ்நாடு இளநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று (மே 3) தொடங்கியது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியது.

Advertisement

இதில், முதல் நாளான இன்று இதுவரை 8,505 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்கள் www.tneaonline.org வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வசதியில்லாதவா்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

அசல் சான்றிதழை பதிவேற்ற ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாளாகும். இணையதளத்தில் கட்டணம் செலுத்தி கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வழிமுறைகள், முழுமையான விவரங்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 1800-425-0110, theacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

summary

Tamil Nadu Engineering Admissions: 8,505 Applicants on Day One

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.