பஞ்சாப்: பல்கலைக்கழக விடுதியில் பொறியியல் மாணவரின் சடலம் மீட்பு!
பஞ்சாபி பல்கலைக்கழக விடுதியில் பொறியியல் மாணவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து...
பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதி அறையில் பி.டெக் படித்துவந்த மாணவர் ஒருவர் சடலமாகக் மீட்கப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
உயிரிழந்தவர், பஞ்சாப் மாநிலம், தர்ன் தாரன் மாவட்டத்தின் பிங் காங் கிராமத்தைச் சேர்ந்த வருண் பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டது.
விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவர் தனது சில தனிப்பட்ட பொருள்களை எடுப்பதற்காக புதன்கிழமை (மே 20) இரவு அறைக்குச் சென்றபோது, இந்தச் சம்பவம் தெரியவந்தது. உள்ளே நுழைந்த அந்த மாணவர், வருண் ப்ரீத் அந்த அறையில் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டார்.
Advertisement
Advertisement
அதன்பின், வளாகத்திலேயே உள்ள மருத்துவக் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருண் ப்ரீத்-ஐ பரிசோதித்துப் பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதைப் பற்றி, விடுதி பொறுப்பாளர் கூறுகையில், ”இந்த உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்த மாணவரின் உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வெளியான பிறகே தெளிவான விளக்கத்தைத் தர முடியும்” எனத் தெரிவித்தார்.