முகப்பு
தமிழ்நாடு

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் குறித்து...

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலா பயனிகள். - படம்: டிஎன்எஸ்
பகிர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையிலுள்ள பஞ்சலிங்க அருவியில் கொளுத்தும் கோடையிலும் நீர்வரத்து வருவதாலும் தற்பொழுது பள்ளிகள் விடுமுறை என்பதாலும் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Advertisement

கோடை வெய்யில் அதிகரித்து காணப்படுவதால், வெப்பத்தை தவிர்க்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை அறநிலையத் துறையினரும் வனத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Tourists are flocking to the Panchalinga Falls at Thirumoorthy Hills, located near Udumalai in the Tiruppur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.