நன்றி தெரிவிக்க கொளத்தூர் வந்த மு.க. ஸ்டாலின்! கண்ணீர்விட்ட தொண்டர்கள்!
நன்றி தெரிவிக்க கொளத்தூர் தொகுதிக்கு வந்த மு.க. ஸ்டாலினைப் பார்த்து தொண்டர்கள் கண்ணீர்விட்டனர்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்திருந்தாலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை 5.45 மணிக்கு கொளத்தூர் தொகுதிக்கு வந்துள்ளார்.
கொளத்தூருக்கு தன்னுடைய பிரசார வாகனத்தில் வந்த மு.க. ஸ்டாலின், தனக்காக வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்று மாலையே தலைவர்களில் முதல் ஆளாக மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளார் ஸ்டாலின்.
Advertisement
Advertisement
கொளத்தூர் தொகுதிக்கு வந்திருக்கும் மு.க. ஸ்டாலின், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் வந்து நன்றி தெரிவித்து வருகிறார். அவரை ஆயிரக்கணக்கான திமுகவினர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
அவருடைய வாகனத்தில் சேகர்பாபு நின்று கொண்டு வருகிறார். தோல்வியடைந்த நிலையிலும், தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து கண்கலங்கியபடியே வந்துகொண்டிருந்தார்.
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். 18 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் ஒரே ஒரு சுற்று முடிவில் மட்டுமே திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலைக்கு வந்தார். தபால் வாக்குகளிலும் பின்தங்கியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
MK Stalin came to Kolathur to express his gratitude! Volunteers shed tears!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.