சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது.
கத்தரி வெய்யில் மே 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த சில நாள்களாகவே வெய்யில் சுட்டெறித்து வந்தது. பல இடங்களில் வெய்யில் சதம் அடித்து வந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், குளிர்ந்த காற்றும் நிலவி வந்த நிலையில் சட்டென்று வானிலை மாறி மழை மேகங்கள் உருவானதையடுத்து, பலத்த மழை பெய்ய தொடங்கியது.
Advertisement
கிண்டி, பல்லாவரம், சாலிகிராமம், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோபாலபுரம், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், தேனாம்பேட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.