ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது! விஜய்க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவு
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவு...
விஜய்க்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஷ் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாதது, அரசியலமைப்புக்கு முரணானது.
Advertisement
நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், விஜய்க்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. அவையில் தனது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆட்சியமைப்பதில் விஜய்க்கு சிக்கல்
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5 எம்எல்ஏக்கள்) நேற்று ஆதரவு அளித்தது.
மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் இரண்டாவது முறையாக ஆளுநரை இன்று சந்தித்துள்ளார். அப்போது போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விசிக கோரியுள்ளது. இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் புதுவையில் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து திமுக, அதிமுகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
விஜய் எப்போது ஆட்சியமைப்பார் என தவெகவினர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.