தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது! பிளஸ் 2 மாணவர்களுக்கு அன்பில் மகேஸ் வாழ்த்து
பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து பற்றி...
பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இது ரிசல்ட் தான், இதுவே வாழ்க்கை கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Advertisement
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 2 ஆம் தேதி முதல் மாா்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.