பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்தது குறித்து...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார். ஆனால், கோடை வெய்யிலின் தாக்கம் குறையாத நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது.
இதனைக் கருத்தில்கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இது குறித்து அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:
மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியின் போது, கோடை வெய்யிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இம்முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும். வெய்யிலின் தாக்கம் குறையும் வரையில், வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். மாணவர்களின் நலன் மிக முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றது குறிப்பிடத்தக்கது.
Former School Education Minister Anbil Mahesh stated on Tuesday that the date for reopening schools in Tamil Nadu should be postponed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.