தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது பற்றி...
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யில் காரணமாக தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் அந்த தேதியை உறுதி செய்திருந்தது. மேலும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
ஆனால், கோடை வெய்யிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இதன்காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை ஒரு வார காலம் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை வீசக் கூடுமா? வெய்யிலின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கை தொடர்பாக முதல்வர் ஜோசப் சி. விஜய் தலைமையில் அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
வானிலை மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.