FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஜூன் 4 இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 3 ஜூன் 2026, 5:26 am IST
பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை முடிந்து வரும் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்குவதுடன், தேவையான சுகாதார வசதிகளை தொடா்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மின்சாதனங்கள் பாதுகாப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும், பள்ளிகளின் மேற்கூரையில் நீா் மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தால் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments