முகப்பு
தமிழ்நாடு

தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகுவோம் - பெ.விஸ்வநாதன்

Updated On : 8 மே 2026, 5:30 am IST
- PTI
பகிர்:

தவெக தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது விஜய் தலைமையிலான தவெக. இதையடுத்து, ஆளுநரை அணுகி ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். ஆனால், அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இது தொடா்பாக பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் கூறியதாவது: முதலில் பெரும்பான்மை பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநா் கோர வேண்டும். பெரும்பான்மை பலம் குறைவாக இருந்தால் அடுத்ததாக, தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியின் பலத்தின் அடிப்படையில் நிரூபிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை மறந்துவிட்டு உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என்றாா்.

Advertisement