விஜய்யை பதவியேற்க அனுமதிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்
சென்னை, மே 7: முதல்வராக விஜய் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): தமிழக வெற்றிக் கழகத்துக்கு 108 சட்டப்பேரவை உறுப்பினா்களை வழங்கி, தவெகவை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தோ்வு செய்துள்ளனா். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சி.ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறாா். ஆளுநா் மூலம் அரசியல் சாசனத்துக்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பாஜக கடைப்பிடித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாகவே ஆளுநா், விஜய்யை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறாா். இது ஏற்புடையதல்ல.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநா், அரசமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆா். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீா்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஆளுநா், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின் உணா்வை மதித்து நடக்க வேண்டும்.
Advertisement