முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளது பற்றி...

மேற்கு வங்க சட்டப்பேரவை பாஜக தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு - ANI
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி கூறி வருகிறார்.

Advertisement

Advertisement

- PTI

இதனிடையே நாளை (மே 9) பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பவானிபூர் தொகுதியில் மமதாவைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரே முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார்.

- PTI

அக்னி மித்ரா பால் என்பவர் மேற்கு வங்கத்தில் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் வடக்கு வங்காளத்தில் இருந்து ஷங்கர் கோஷ் என்பவருக்கும் துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

summary

Suvendu Adhikari is the new CM of West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments