முகப்பு
இந்தியா

மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!

மேற்கு வங்க ஆளுநர் ரவியுடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு...

மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு... - எக்ஸ்
பகிர்:

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (மே 27) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சுமார் 1.4 மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

இருப்பினும், மேற்கு வங்கத்தின் பாஜக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது குறித்தும், புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, முதல்முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல்வராக சுவேந்து அதிகாரி கடந்த மே 9 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

summary

West Bengal CM Suvendu Adhikari met with the state's Governor, R.N. Ravi, in person and held discussions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.