மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!
மேற்கு வங்க ஆளுநர் ரவியுடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு...
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (மே 27) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சுமார் 1.4 மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
இருப்பினும், மேற்கு வங்கத்தின் பாஜக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது குறித்தும், புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, முதல்முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல்வராக சுவேந்து அதிகாரி கடந்த மே 9 அன்று பதவியேற்றுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
West Bengal CM Suvendu Adhikari met with the state's Governor, R.N. Ravi, in person and held discussions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.