திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!
நடிகர் விஷால் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசியிருப்பதாவது...
நடிகர் விஷால் தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எக்ஸ் பக்கத்தில், “திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவுமிக்க விளைவுகள் பொதுமக்களிடம் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகின. இந்தத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஆட்சி அமைக்க தேவையான 108 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில், யாருமே ஆட்சி அமைக்காத நிலை ஏற்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
இந்த நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தவெக ஆட்சியமைக்காவிட்டால் எந்தக் கட்சி கூட்டணி அமைந்தாலும் பரவாயில்லை; ஆனால் நினைக்கவே முடியாத/ அதிர்ச்சியளிக்கும் விதமாக திமுக - அதிமுக கூட்டணி வைத்தால் பொதும்கள்ளிடமும் வாக்களர்களிடமும் அசம்பாவிதமும் பேரழிவுமிக்க விளைவுகளும் ஏற்படும். அது யாருக்குமே நல்லதல்ல.
இதேபோல 2017/18 கோவா, மணிப்பூர், மேகலாயா குறிப்பாக கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. முதலில் அரசாங்கம் அமைக்கப்பட்டு பின்னர் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். இதேபோல் தளபதி விஜய்க்கு ஏன் அரசமைக்க ஆளுநர் மறுக்கிறார்? மக்களின் வாக்குகளுக்கு என்ன மரியாதை? 233 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும்போது அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
தவெக பெரும்பான்மையாக வென்றுள்ள நிலையில் ஆளுநர் ஆளமுடியாது. இந்த அடிப்படையான உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல மிகப் பெரிய சக்தியான தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். டியர் விஜய் நீங்கள்தான் அரசமைக்க வேண்டும். ஒரு வாக்களராக நான் இதனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.