ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது: சிபிஎம் எம்.ஏ. பேபி
தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது என்று எம்.ஏ. பேபி மதுரையில் கூறியுள்ளது பற்றி..
மதுரை: ஆளுநர் மூலம் தமிழ்நாட்டில் பாஜக அரசியல் செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.ஏ. பேபி, தவெகவுக்கு ஆளுநர் மூலமாக தொல்லை கொடுக்கின்றனர். தனிப் பெரும்பான்மை கட்சியாக உள்ள தவெகவை ஆட்சியமைகக் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். நல்ல முறையில் பேசி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தமிழக ஜனநாயக கலாசாரத்தை பொறுத்தே தவெகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.