சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னை தலைமைச்செயலத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னை தலைமைச்செயலத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதல்வராக இன்று பதவியேற்ற விஜய் பதவியேற்ற உடனே தலைமைச்செயலகம் சென்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். முதல்வராகப் பொறுப்பேற்றதும், அரசு கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டார்.
பின்னர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமைச் செயலர் சாய் குமாருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். முதல்வரின் ஆலோசனையில் காவல் துறை உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
Advertisement
விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்வர் விஜய்க்கு பெரியார் சிலையை பரிசளித்தார் கி.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay held a consultation at the Chennai Secretariat regarding the law and order of Tamil Nadu.