200 யூனிட் மின்சாரம் இலவசம்! விஜய் முதல் கையொப்பம்!
மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய்யின் முதல் கையொப்பம்!
சென்னை : மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் தமிழக முதல்வர் விஜய் கையொப்பமிட்டார்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய்.
Advertisement
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதியதொரு திட்டத்தையும் தொடங்கி வைத்து அதற்கான ஆணையில் அவர் கையொப்பமிட்டார். போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்புப் படை திட்டம் என்ற கோப்பிலும் கையொப்பமிட்டார். அதனைத்தொடர்ந்து, மக்களிடையே உரையாற்றினார்.