முகப்பு
தமிழ்நாடு

தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!

தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமிக்கப்பட்டது குறித்து...

கருப்பையா - படம் - இந்தியத் தேர்தல் ஆணையம்
பகிர்:

தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று (மே 10) தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், அவருடன் தவெகவைச் சார்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக அவைத் தலைவராக தவெக எம்.எல்.ஏ.வான கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கையொப்பமிட்டார்.

Advertisement

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்ட கருப்பையா 63,907 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முன்னதாக 2011 முதல் 2016 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

summary

With C. Joseph Vijay having assumed office as the Chief Minister of Tamil Nadu, Karuppiah has been appointed as the interim Speaker of the House.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.