35 ஆண்டுகளுக்குப் பிறகு..! கேரளத்தில் பெண் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் நியமனம்!
கேரளத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவராக ஷானிமோல் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
கேரளத்தில், சட்டப்பேரவைத் துணைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஷானிமோல் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளத்தில், புதியதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, கேரள சட்டப்பேரவைத் தலைவராக திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் கடந்த சில நாள்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, கேரள சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆரூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஷானிமோல் உஸ்மான் மற்றும் இடதுசாரிக் கூட்டணி சார்பில் பட்டாம்பி சட்டப்பேரவை உறுப்பினர் முகமது முஹ்சின் ஆகியோர் போட்டியிட்டனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இன்று (ஜூன் 2) நடைபெற்ற சட்டப்பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தலில் முஹ்சின் 34 வாக்குகள் பெற்ற நிலையில், ஷானிமோல் உஸ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
இதன்மூலம், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள சட்டப்பேரவையின் துணைத் தலைவாராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.