35 ஆண்டுகளுக்குப் பிறகு..! கேரளத்தில் பெண் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் நியமனம்!
கேரளத்தில் சட்டப்பேரவைத் துணைத் தலைவராக ஷானிமோல் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
கேரளத்தில், சட்டப்பேரவைத் துணைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஷானிமோல் உஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளத்தில், புதியதாகப் பதவியேற்றுள்ள முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, கேரள சட்டப்பேரவைத் தலைவராக திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் கடந்த சில நாள்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, கேரள சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆரூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஷானிமோல் உஸ்மான் மற்றும் இடதுசாரிக் கூட்டணி சார்பில் பட்டாம்பி சட்டப்பேரவை உறுப்பினர் முகமது முஹ்சின் ஆகியோர் போட்டியிட்டனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இன்று (ஜூன் 2) நடைபெற்ற சட்டப்பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தலில் முஹ்சின் 34 வாக்குகள் பெற்ற நிலையில், ஷானிமோல் உஸ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
இதன்மூலம், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள சட்டப்பேரவையின் துணைத் தலைவாராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
In Kerala, Shanimol Usman has been appointed as the Deputy Speaker of the Legislative Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.