ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்
ஜன நாயகன் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கருத்து...
ஜன நாயகன் படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"முதல்வர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகியுள்ளது. ஜன நாயகன் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜன நாயகன் திரைப்படம் இளைஞர்களை மழுங்கடிக்கவில்லை.
Advertisement
Advertisement
ஜன நாயகன் படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர மாணவர்களை மூளைச் சலவை செய்யும் படமல்ல.
நம்மை பொறுத்தவரை வார்த்தைகளின் மூலமாக நாம் செல்லும் பாதையை திசைதிருப்பும் முயற்சியில் யாரும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்" என்றார்.
TN speaker JCD prabhakar speaks about CM vijays jananayagan movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.