முகப்பு
தமிழ்நாடு

மது, கஞ்சாவை ஒழிக்க போா்க்கால நடவடிக்கை தேவை அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் மது, கஞ்சா புழக்கத்தால் நிகழக்கூடிய குற்றங்களைத் தடுக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தல்

Updated On : 12 மே 2026, 4:16 am IST
அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மது, கஞ்சா புழக்கத்தால் நிகழக்கூடிய குற்றங்களைத் தடுக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி அருகே மாணவா் கோகுல், அவருடன் பயிலும் மாணவா்கள் இருவா் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதால் அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் கோகுலை மற்ற மூவரும் சோ்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனா். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை விடியோவாக பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட பிற போதைப் பொருள்கள் விற்பனை உச்சத்தை அடைந்துள்ளதை இந்தக் கொலை காட்டுகிறது. இளைஞா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments