50 கார்களில் அணிவகுத்த பாஜக நிர்வாகி! இதுதான் அந்த சிக்கனமா?
மத்தியப் பிரதேசத்தில் 50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர் செயலுக்குக் கடும் விமர்சனம்
ஈரான் - அமெரிக்க போர் காரணமாக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஒருவரின் செயல் நகைமுரணாக அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தெலங்கானாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாக உள்ளது.
உலக அளவில் பெட்ரோல் - டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. எனவே அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். பெட்ரோல் - டீசலை வீணாக்காமல் சேமிப்பதன் மூலம் அவற்றை வாங்குவதற்கு செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று வலியுறுத்தியிருந்தார்.
Advertisement
இது பற்றி இரண்டு நாள்களாக மக்கள் பேசி வரும் நிலையில், மத்திய பிரதேச மாநில பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உஜ்ஜைனிலிருந்து போபாலுக்கு செல்லும்போது 50 சொகுசு கார்கள் அணிவகுக்க பல ஊர்களை அதிரவிட்டுள்ளார்.