முகப்பு
தமிழ்நாடு

பாஜக நிர்வாகி புகார்: யூடியூபர் முக்தார் கைது!

பாஜக நிர்வாகி புகாரைத் தொடர்ந்து யூடியூபர் முக்தார் கைது செய்யப்பட்டது தொடர்பாக...

Updated On : 10 ஜூன் 2026, 7:02 pm IST
யூடியூபர் முக்தார் - படம்: முகநூல்
பகிர்:

பாஜக நிர்வாகி அளித்த புகாரின்பேரில் யூடியூபர் முக்தார் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலர் அலிஷா அப்துல்லா, பிரபல யூடியூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக மாநில நிர்வாகியும், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனுமான திருச்சி சூர்யா ஆகியோர் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.

அதில், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் அரசியலுக்கு வந்தபோது முக்தாரும், திருச்சி சூர்யாவும் என்னை அவதூறாகப் பேசினார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் வெளியிட்ட விடியோவில், எனது இரட்டைக் குழந்தைகள் தொடர்பாக அவதூறான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இது எனக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, யூடியூபா் முக்தார், திருச்சி சூர்யா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

புகாரின்பேரில், சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து, திருச்சி வயலூர் சாலை வாசன் வேலி பகுதியில் உள்ள திருச்சி சூர்யா வீட்டில் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், தற்போது யூடியூபர் முக்தார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த முக்தார், கர்நாடகத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

summary

YouTuber Mukhtar Ahmed has been arrested based on a complaint filed by a BJP functionary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.