தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டப்பேரவையில் தொடங்கியது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
இதையடுத்து தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியுள்ளது. தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர்.
Advertisement
பெரும்பான்மையை நிரூபிக்க 50 சதவீதம் + 1 வாக்குகள் தேவை. அதன்படி, 232 எம்எல்ஏக்களில் 116 வாக்குகள் இருந்தால் தவெக அரசு வெற்றி பெறும்.
ஏற்கெனவே தவெக 120 எம்எல்ஏக்கள் ஆதரவு வரை வைத்திருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்த சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளதால் பெரும்பான்மைக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக முதல்வர் விஜய், தவெக எம்எல்ஏக்கள், திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.