தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தவெக வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசில் முக்கிய பொறுப்பு வகித்த பலரும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்து வந்தனர். மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்த பி.எஸ். ராமன் ராஜிநாமா செய்தார்.
Advertisement
இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் இன்று (மே 13) நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விஜய் நாராயண் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.