தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசில் முக்கிய பொறுப்பு வகித்த பலரும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனர். மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்த பி.எஸ். ராமன் ராஜிநாமா செய்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்து அரசாணை இன்று (மே 13) வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விஜய் நாராயண் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் தலைமை வழக்கறிஞராகக் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Vijay Narayan has been appointed as the Advocate General of the Tamil Nadu Government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.