முகப்பு
தமிழ்நாடு

ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!

தமிழகத்தில் 17 உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளது குறித்து...

தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் இன்று(மே 18) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடா்ச்சியாக 17 உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

* நீர்வளத் துறை செயலாளராக சத்யபிரத சாஹு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன் மாற்றப்பட்டு, சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* பொதுப்பணித் துறை செயலராக சுசோங்கம் ஜடாக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார்.

* பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி.யாக இருந்த பொன்ராஜ், ஆலிவர் குடிநீர் வழங்கல் வடிகால் மேலாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

* தமிழக அரசின் பெண்கள் முன்னேற்ற நிறுவன ஆணையராக ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* போக்குவரத்துத் துறை செயலராக வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை மெட்ரோ குடிநீர் மேலாண் இயக்குநராக ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

summary

17 senior IAS officers in Tamil Nadu have been transferred today (May 18).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.