சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தவெக அரசு நிறுத்தி வைத்துள்ளது ஏன்? கனிமொழி
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி....
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடுத்தடுத்து நிகழும் நிலையில் இந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது இந்த அரசு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.