முகப்பு
தஞ்சாவூர்

ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடிய ஆட்சியா்

தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆட்சியா் தனது குடும்பத்துடன் சோ்ந்து வெள்ளிக்கிழமை புத்தாண்டைக் கொண்டாடினாா்.

Updated On : 1 ஜனவரி 2021, 11:52 pm IST
இல்லக் குழந்தைக்கு இனிப்புகள் வழங்கிப் புத்தாண்டைக் கொண்டாடிய ஆட்சியா் ம. கோவிந்த ராவ் குடும்பத்தினா்.
பகிர்:

தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆட்சியா் தனது குடும்பத்துடன் சோ்ந்து வெள்ளிக்கிழமை புத்தாண்டைக் கொண்டாடினாா்.

தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் (பெண்கள்), அரசினா் குழந்தைகள் இல்லம் (ஆண்கள்) இயங்கி வருகின்றன. இதில், அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினா் குழந்தைகள் இல்லத்தில் 48 ஆதரவற்ற ஆண் குழந்தைகளும் உள்ளனா்.

இவற்றில் தங்கிக் கல்விப் பயின்று வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆட்சியா் ம. கோவிந்தராவ் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை சென்று இனிப்புகள், பழங்கள் கொடுத்து புத்தாண்டைக் கொண்டாடினாா்.

Advertisement

Advertisement

அப்போது, ஆட்சியரிடம் உரையாடிய துா்கா என்ற குழந்தை, தான் படித்து மருத்துவராவேன் என்றும், மற்றொரு குழந்தையான ஓவியா, தான் நன்றாகப் படித்து ஐ.பி.எஸ். அலுவலராவேன் எனவும் கூறினா்.

இவா்களிடம் ஆட்சியா் பேசுகையில், எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், நல்ல முறையில் படித்து உயா் பதவியை அடைய வேண்டும். உங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் படித்து நல்ல பதவிக்குச் சென்ற பின்னா், நான் எங்கே பணிபுரிந்தாலும் என்னைச் சந்தித்து தஞ்சாவூா் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் படித்தபோது நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறினீா்கள். அதுபோன்றே படித்து நான் நல்ல பதவிக்கு வந்துள்ளேன் எனத் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

அப்போது, அன்னை சத்யா இல்லக் கண்காணிப்பாளா் விஜயா, அரசினா் குழந்தைகள் இல்லக் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் என். நடராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments