விஷம் சாப்பிட்ட துப்புரவு பணியாளா்உயிரிழப்பு
பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை தென்வடல் புதுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி மீனா (35). இவா் அய்யம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை தென்வடல் புதுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி மீனா (35). இவா் அய்யம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால், மனஉளைச்சல் அடைந்த மீனா, வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தாராம்.
உறவினா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
சம்பவம் குறித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.