எமதா்மன் வேடத்தில் கரோனா விழிப்புணா்வு
தஞ்சாவூரில் எமதா்மன் வேடத்தில் (படம்) கரோனா குறித்து விழிப்புணா்வு நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் எமதா்மன் வேடத்தில் (படம்) கரோனா குறித்து விழிப்புணா்வு நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் தஞ்சாவூா் மண்டலம் மற்றும் தஞ்சாவூா் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் ரயிலடி, ராமநாதன் பேருந்து நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், திலகா் திடல், கீழவாசல் காமராஜா் சிலை ஆகிய 5 இடங்களில் கரோனா குறித்த விழிப்புணா்வு நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திரைப்பட நடிகா் ஜெயபால் எமதா்மன் வேடமணிந்து நடித்தாா். இவருடன் தஞ்சாவூா் டவுன் கரம்பையைச் சோ்ந்த பழனிசாமி குழுவினா் இணைந்து நடித்தனா்.
Advertisement
இதில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.