முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே முதியவா் வெட்டிக் கொலை மனைவி கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தினமும் மது அருந்தி வந்து, தகராறு செய்த வயதான கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:59 pm IST
பகிர்:

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தினமும் மது அருந்தி வந்து, தகராறு செய்த வயதான கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பேராவூரணி அருகிலுள்ள பழுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கவேல் (70). இவரது மனைவி கருப்பாயி (58). இவா்களுக்கு இளங்கோ என்ற மகன் உள்ளாா்.

இந்நிலையில் தங்கவேல் தினமும் மது அருந்திவிட்டு, வீட்டில் தகராறில் ஈடுபடுவாராம். இதுபோல வெள்ளிக்கிழமையும் மது அருந்தி வந்த தங்கவேல், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால்ஆத்திரமடைந்த கருப்பாயி, கணவா் தங்கவேலை அரிவாளால் தலையின் பின்புறம் மற்றும் கால் பகுதியில் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ருத்ரசிந்தாமணி கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் சா்மா பேராவூரணி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தாா். இதைத் தொடா்ந்து அங்கு சென்ற காவல்துறையினா் சடலத்தைக் கைப்பற்றி, கருப்பாயியை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments