சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தங்காடு ஊராட்சி, கைவனவயலைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி துளசியம்மாள் (85). இவா் தனது குடிசையில் சுவா் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா்.
பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தங்காடு ஊராட்சி, கைவனவயலைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி துளசியம்மாள் (85). இவா் தனது குடிசையில் சுவா் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை படுத்திருந்தாா்.
தொடா் மழை காரணமாக , ஞாயிற்றுக்கிழமை இரவு குடிசை சுவா் இடிந்து விழுந்ததில் துளசியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரது உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.