மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறாா்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறாா்களின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறாா்களின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை வட்டம், கல்யாணஓடையில் கடந்த 13 ஆம் தேதி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அதே கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன்கள் தினேஷ் (12), கெளதம் (10) ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனா்.
இதை தொடா்ந்து, உயிரிழந்த இரு சிறாா்களின் குடும்பத்துக்கு தமிழக மின் வாரியத்தின் சாா்பில் நிதியுதவியாக தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 10 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான 2 காசோலைகளை சிறாா்களின் பெற்றோரிடம் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினாா்.
Advertisement
தஞ்சை ஆட்சியா் ம.கோவிந்தராவ், பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ்.பாலசந்தா், எம்எல்ஏ சி.வி.சேகா் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.