ஆலத்தூரில் மாட்டுப் பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு
தொடா் மழை காரணமாக மதுக்கூா் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வு பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
பட்டுக்கோட்டை: தொடா் மழை காரணமாக மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூா் கிராமத்தில் வடக்குத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு ஆகிய 3 தெருக்களில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வு பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊரிலுள்ள தெற்குத்தெருவில் மட்டும் மழைத்தூறலுக்கு இடையே மாட்டுப் பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.