புளியங்குடி அருகே காட்டுப்பன்றி வேட்டையாடியவருக்கு அபராதம்
புளியங்குடி அருகே மின் வேலி அமைத்து காட்டுப் பன்றி வேட்டையாடியவருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடையநல்லூா்: புளியங்குடி அருகே மின் வேலி அமைத்து காட்டுப் பன்றி வேட்டையாடியவருக்கு ரூ. 50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில் வனச் சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையில், வனவா் அசோக்குமாா், வனக் காப்பாளா்கள் செல்வராஜ் குகன், பூபதி, மகாதேவபாண்டியன் உள்ளிட்டோா் புளியங்குடி அருகே உள்ள தலையணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனராம்.
அப்போது, அருளாட்சி பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த மாசிலாமணி (60) என்பவா் தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்து காட்டுப் பன்றி வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.