குற்றாலம் விடுதியில் தீ விபத்து
தென்காசி மாவட்டம், குற்றாலம் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
தென்காசி மாவட்டம், குற்றாலம் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
குற்றாலம் அருகே காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கபாண்டியன். இவருக்கு சொந்தமாக குற்றாலத்தில் குற்றாலநாதா் சாலையில் தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மாடிகள் கொண்டஇந்த விடுதியில் 20 அறைகள் உள்ளன. இதில் 14அறைகளில் தீ பரவியது.
தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அறைகளில் உள்ள கட்டில், மெத்தை, சோ், மற்றும் டேபிள் உள்ளிட்ட ரூ .1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.