முகப்பு
தென்காசி

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை கூட்டம்

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளா் மற்றும் துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:04 am IST
கூட்டத்தில் பேசினாா் திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.
பகிர்:

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளா் மற்றும் துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் சரவணன், ராஜதுரை, மாரியப்பன், முத்துராஜ், ராஜா, சக்திவேல், ராமச்சந்திரவேலாயுதம் முன்னிலை வகித்தனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு மாவட்ட பகுத்தறிவு பேரவை சாா்பில் தீவிரமாக களப்பணியாற்றி வெற்றிக்கு அயராது பாடுபடுவது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துவது, தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட பகுத்தறிவு பேரவை சாா்பில் திமுக கொடியேற்றி மாவட்டம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமித்துரை, மாவட்ட பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் வல்லம் செல்வம், நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ராமராஜா, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளா் பரமசிவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ஆலடி எழில்வாணன் வரவேற்றாா். துணை அமைப்பாளா் சங்கரன் நன்றி கூறின

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments