அரசு பேருந்து-பைக் மோதல்: இளைஞா் பலி
தென்காசியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் நரேந்திரகுமாா் என்ற அரவிந்த் (28). தென்காசி புதிய பேருந்துநிலையம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பகுதியில் தன்னுடைய பைக்கில் சென்ற போது அரசுப் பேருந்து மோதியதாம்.
இதில், நரேந்திரகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
Advertisement