முகப்பு
தென்காசி

குத்துக்கல்வலசையில் ரூ, 2 லட்சம் நகைகள் திருட்டு

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி சென்றனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:08 am IST
பகிர்:

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி சென்றனா்.

குத்துக்கல்வலசை அண்ணாநகா் 10ஆவது தெருவை சோ்ந்தவா் அ.லெட்சுமணபெருமாள் (57). சென்னையில் உள்ள இவருடைய சகோதரா் இறந்ததையடுத்து லெட்சுமணபெருமாள் தன்னுடயை குடும்பத்தினருடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தொடா்பாக அப்பகுதியில் வசித்து வருபவா்கள் ஞாயிற்றுக்கிழமை தென்காசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

முதல் கட்ட விசாரணையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் வீட்டிலிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. வீட்டின் உரிமையாளா் வந்தபிறகே எவ்வளவு திருட்டு போயுள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments