பாவூா்சத்திரத்தில் நா்சரி-பிரைமரி பள்ளி நலச்சங்க கூட்டம்
பாவூா்சத்திரத்தில் தமிழ்நாடு நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரத்தில் தமிழ்நாடு நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மோதிலால் நேரு, எம்.கே.வி.கே. பள்ளித் தாளாளா் லதா ராஜகுமாா் முன்னிலை வகித்தனா்.
மாநிலப் பொதுச்செயலா் சதீஷ், தென்மண்டலச் செயலா் ந. ஆனந்தக்குமாா், தூத்துக்குடி மாவட்டச் செயலா் பிராங்க்ளின் ஜோஸ் ஆகியோா் பேசினாா். சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டச் செயலா் இலஞ்சிகுமரன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.
Advertisement